Saturday 18 May 2024

யாழில். பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்..!!!

யாழில். பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்..!!!



யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.


இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் உயிரிழப்பு..!!!

மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் உயிரிழப்பு..!!!



உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை பறிப்பதற்காக மாமரமொன்றில் ஏறிய நிலையில் தவறிவிழுந்ததில் சுயநினைவை இழந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவர் பலாலி இராணுவ முகாமில் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்றைய ராசிபலன் - 18.05.2024..!!!

இன்றைய ராசிபலன் - 18.05.2024..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டைகள் விலகும். வேலை என்று வரும்போது தான் சிக்கலில் சிக்குவீர்கள். கவனக்குறைவால் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேனேஜர் கிட்ட பார்த்து பேசுங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாலை கோயிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்யும் போதும் கவனமாக இருங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி பெறக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். உங்களை முட்டாள் என்று நினைத்தவர்கள் கூட, உங்கள் புத்திசாலித்தனத்தை பற்றி தெரிந்து கொள்வார்கள். எதிரிகள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணங்கள் எல்லாம் மேலோங்கி இருக்கும். எல்லா விஷயத்தையும் சரிவர செய்து முடிப்பீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பு கொஞ்சம் அதிகரிக்கும். தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்க மாட்டீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு மிக மிக பயனுள்ள நாளாகவும் அதேசமயம் மிக மிக முக்கியமான நாளாகவும் இருக்கப்போகின்றது. பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இறைவனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கிறது.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் தேவையற்ற பயம் இருக்கும். குழப்பமான நேரத்தில் எந்த பிரச்சனைக்கும் முடிவு எடுக்காதீங்க. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். எதிரிகளால் சின்ன சின்ன தொல்லைகள் வரும் சமாளிக்க தயாராக இருந்து கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். யாரை நம்பியும் பணம் கொடுக்கக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் புதிய முதலீட்டை செய்யாதீர்கள். வேலையில் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம். அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. குலதெய்வ வழிபாடு செய்வது இன்று குறைகளை தீர்க்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேரு மத்தியில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதில் தான் உங்களுக்கு சில பல பிரச்சனைகள் வரும். நிறைய எதிரி தொல்லை கண் திருஷ்டியில் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பிரச்சனைகள் வந்து சிரமத்தை கொடுக்கும். தேவையற்ற குழப்பங்கள் நிலவும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். வேலை செய்யும் இடத்தில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காதீங்க. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்கவே கூடாது. தொழிலில் அதிக கவனம் தேவை.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலையை 10 நிமிடத்தில் செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பிரமோஷன் சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் நீண்ட தூர பயணத்தை தள்ளி போடவும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப சாந்தமான நாளாக இருக்கும். பிரச்சனைகளே வந்து இடி போல தலைமேல் விழுந்தாலும் அசர மாட்டீங்க. உங்கள் நிலையிலிருந்து மாற மாட்டீர்கள். அதற்காக அவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று சொல்லவில்லை. மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று விவரமாக வேலை செய்வீர்கள். உங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தவர்கள் முன்பு, வாழ்ந்து காட்டுவீர்கள். வேகத்தை விட விவேகம் தான் இன்று அதிகமாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கம் இருக்கும். வாகனத்தில் செல்லும் போது மட்டும் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாடு திரும்ப வாய்ப்புகள் வரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால், குடும்பத்தில் பிரச்சனை இல்லை. வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்லது நடக்கும். மேனேஜரின் தொல்லை விலகும். உங்களுடைய டார்கெட்டை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். இன்செட்டிவ் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

Friday 17 May 2024

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்..!!!

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்..!!!


தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் அரச பயங்கரவாதம் நடாத்திய இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

நல்லூரடியில் உள்ள தியாகதீபத்தின் நினைவிடத்தின் முன்னால் ”தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்” என்ற பெயரில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆவணப் பிரிவினரால்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் நாம் அனுபவித்தவற்றை ஆவணப்படுத்தல்கள் மற்றும் நினைவுகூர்வதன் ஊடாக அடுத்த சந்ததியினருக்கு நாம் இழந்தவற்றையும், எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கடத்திச் செல்ல வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.








இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



இன்று வெள்ளிக்கிழமை (மே 17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.8026 ஆகவும் விற்பனை விலை ரூபா 305.1511 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,




20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு..!!!

20ஆம் திகதி வரையில் கனமழைக்கு வாய்ப்பு..!!!



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது.


இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 18,19 ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

வருடந்தோறும் சித்திரை சிறு மாரி என்ற கருத்து எங்களிடையே மிக நீண்ட காலமாக உள்ளது. இதனைச் சிலர் 'சித்திரைக்குழப்பம்' என்ற பெயரிலும் அழைப்பர்.

இம்முறை சித்திரைத் குழப்பம் சித்திரை மாத இறுதிநாட்களில் (தமிழுக்கு) காற்றுச் சுழற்சியோடு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் கிழக்கு வங்காள விரிகுடாவில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை எதிர்வரும் 19 ம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

அதேவேளை இந்த நிகழ்வுகளின் பின்னர் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என மேலும் தெரிவித்தார்.