Saturday 27 April 2024

மே முதல் வாரம் உருவாகும் இரண்டு ராஜயோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழையை கொடுக்கப்போகுதாம்..!!!

மே முதல் வாரம் உருவாகும் இரண்டு ராஜயோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழையை கொடுக்கப்போகுதாம்..!!!


ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது, மே மாதம் தொடங்கப்போகிறது. மே முதல் வாரத்தில், வியாழன் பெயர்ச்சி நடக்கப்போகிறது. மேலும், வரும் முதல் வாரத்தின் மத்தியில் சந்திரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். வியாழனும் சந்திரனும் ஒன்றுக்கொன்று இணைந்து 4 மற்றும் 10 ஆம் வீட்டில் இருப்பது கஜகேசரி யோகத்தை ஏற்படுத்தும். மேலும் வரும் வாரம் சனி சாசா ராஜயோகத்தை உருவாக்குகிறது.

இந்த சூழ்நிலையில் 5 ராசிகளை சேர்ந்தவர்களுக்கு மே முதல் வாரம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த சொந்தக்காரர்கள் முதலீடு மற்றும் வெளிநாடுகளில் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல வாய்ப்புகள் அமையும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மே முதல் இரண்டு யோகங்களால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.


மேஷம்

மேஷ ராசிக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வாரத்தின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க நபரின் நட்பு கிடைக்கலாம், அவர்களின் மூலம் பெரிய உதவி கிடைக்கலாம். இந்த வாரம் பழைய முதலீடுகளால் ஆதாயம் கிடைக்கும்.

வெளிநாட்டில் வேலை செய்ய அல்லது தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்களின் மிகப்பெரிய தடைகள் நீங்கும். இந்த நேரம் காதல் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் காதல் துணையுடனான உறவு மிகவும் வலுவாக இருக்கும்.



மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இருப்பினும், நிதி விஷயங்களில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்த நீங்கள், இந்த நேரத்தில் எதிர்பாராத லாபங்களை சந்திப்பீர்கள்.

நிதி விஷயங்களில் நீங்கள் நினைத்ததை விட முன்னேற்றம் ஏற்படும். ஒன்றன் பின் ஒன்றாக நிதிப் பலன்களைப் பெறத் தொடங்குவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் துணையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.


கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் சிரமமாக இருக்கலாம், ஆனால் வாரம் நகரும் போது பிரச்சினைகள் குறைந்து அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கும். இந்த வாரம் உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

இந்த ராசி பெண்கள் இந்த காலகட்டத்தில் ஆன்மீக விஷயங்களில் அதிக நேரத்தை செலவிடுவார்கள். இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாரத்தின் நடுப்பகுதி மிகவும் சாதகமாக இருக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை வீணாக்காமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இருப்பினும், இந்த வாரம் உங்களின் பல பிரச்சனைகள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் உதவியால் தீர்க்கப்படும்.
உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். வரும் நாட்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.


தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த வாரம், செல்வாக்கு மிக்க நபரின் உதவியால், உங்களின் நீண்டகால பிரச்சனைகள் சில தீரும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தனுசு ராசிக்காரர்கள் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த வாரம் உங்களின் சில நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம்.
யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்..!!!

யாழில் பாரிய காணி மோசடி - அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்..!!!


யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.

குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


அதற்கமைய காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் மிளகாய் தோட்டங்களுக்குள் புகுந்து விசமிகள் வெறியாட்டம்: நாசமான பல லட்சங்கள்..!!!

கிளிநொச்சியில் மிளகாய் தோட்டங்களுக்குள் புகுந்து விசமிகள் வெறியாட்டம்: நாசமான பல லட்சங்கள்..!!!


கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில ் இயங்கிவரும் சட்டவிரோத குழுஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கியவாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று(25.04.2024) அழிக்கப்பட்டுள்ளது.

இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும், வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.

பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச்செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








யாழ் போதனா வைத்தியசாலையில் பெண்ணுக்கு நடந்தது என்ன; வெளியான பகீர் காணொளி..!!!

யாழ் போதனா வைத்தியசாலையில் பெண்ணுக்கு நடந்தது என்ன; வெளியான பகீர் காணொளி..!!!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருபிள்ளையின் தாயான இளம் பெண் உயிரிழந்தமை தொடர்பில் பகீர் காணொளி வெளியாகியுள்ள நிலையில் அங்கு சிகிச்சைக்கு செல்வதற்கே மக்கள் அச்சம் கொள்கின்ற நிலை தோன்றியுள்ளது.

உயிரிழந்த கிளிநொச்சி பெண் சுகவீனமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கணவனை இழந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாயாவார்.

இந்நிலையில் சுகயீனமுற்றிருந்த பெண்னிடம் மருந்துப்பொருகளை காசுகொடுத்து வாங்கி தருமாறு கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து தான் வீடு செல்ல விரும்புவதாக பெண் கூறியபோதும் அவரை வீட்டுக்கு அனுப்பாமல் இருந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கூட வைத்தியசலை ஊழியர்கள் மறைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பிலான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தாயை இழந்து தவிக்கும் அந்த பிள்ளைக்கு யார் ஆறுதல் கூறுவது. அதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையில் அப்பாவி மக்களின் உயிர் பறிபோவது தொடர்ச்சியாக நடந்தேறி வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் உப அதிபர் ஜெயந்தி ஜெயதரன் காலமானார்..!!!

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் உப அதிபர் ஜெயந்தி ஜெயதரன் காலமானார்..!!!



தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சிரேஷ்ட விளையாட்டுத்துறை ஆசிரியையும் உப அதிபருமான ஜெயந்தி ஜெயதரன் தனது 59ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார்.

மகாஜனா கல்லூரியில் விளையாட்டுத்துறை ஆசிரியையாக சுமார் 10 வருடங்கள் பணியாற்றி வந்த ஜெயந்தி ஜெயதரன், பல விளையாட்டு வீர, வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்வி பயின்ற அவர் அதே பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றினார்.

யூனியன் கல்லூரியின் வலைப்பந்தாட்ட அணியைக் கட்டியெழுப்புவதில் மிக முக்கிய பங்காற்றிய ஜெயந்தி ஜெயதரன், 2012இல் மலேசியாவில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் யூனியன் கல்லூரி அணியைப் பங்குபற்றச் செய்திருந்தார்.

அதன் பின்னர் மகாஜனா ஆசிரியர் குழாத்தில் இணைந்த அவர் அங்கும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

தேசிய பாடசாலைகள் மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகளில் சாதனைகள் நிலைநாட்டிய மகாஜனா மாணவர்களின் வெற்றிகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இன்றைய ராசிபலன் - 27.04.2024..!!!

இன்றைய ராசிபலன் - 27.04.2024..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனசு பலவீனமா இருக்கப் போகின்றது. யாராவது கோவப்பட்டு திடீரென்று திட்டி விட்டால் கூட தாங்காமல் ரொம்பவும் மனசு உடைந்து போவீர்கள். இதனால் கவனமாக இருக்கவும். வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்களை அனுசரித்து நடக்கவும். விட்டுக் கொடுத்து நடக்கவும். தேவையில்லாத பிரச்சனைக்கு செல்ல வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அனுபவரீதியாக நிறைய பாடங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நாலு நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். நீங்கள் கேட்காமலேயே பதவி உயர்வு சம்பள உயர்வு உங்களைத் தேடி வரும். பிள்ளைகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் அடம் பிடித்து கேட்கக் கூடிய விஷயங்களை உடனே செய்து தராதீங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நல்ல விஷயங்கள் நடக்கும். இதனால் மனசு சந்தோஷப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். போட்டி பொறாமைகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.


கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். உங்களுடைய பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். முன்பின் தெரியாத மனிதர்களிடம் அதிகமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகளுக்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்தால் பிரச்சனை கிடையாது. வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த அளவுக்கு நல்லது நடக்காது. ஆனால் அன்றாட வேலைகளில் எந்த பிரச்சனையும் இருக்காது. பெருசாக எதுவும் எதிர்பார்க்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கொஞ்சம் பணிவாக பேசுங்கள். தொழிலில் போட்டி பொறாமைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை கொஞ்சம் அனுசரணையாக நடத்துங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டவர்கள் மனதில் இன்று சந்தோஷம் பிறக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் உங்களை டார்கெட் செய்து, உங்களை பிரச்சினையில் தள்ளிவிட்டவர்கள் எல்லாம் உங்களிடம் வந்து சரண்டர் ஆகி மன்னிப்பு கேட்பார்கள். ஆனாலும் அவர்களிடத்தில் கொஞ்சம் கவனமாகவே இருங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பிரமோஷன் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும், வேலை விஷயத்தில் ப்ரமோஷன் கிடைக்கலாம். புதுசாக கல்யாணம் ஆனவர்களுக்கு அம்மா அப்பா பிரமோஷன் கிடைக்கலாம். இப்படி நிறைய நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும். வியாபாரத்தில் புதிய முதலீடு உயர்வை கொடுக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஏதாவது சின்ன விஷயத்தை மறந்தால் கூட அதன் மூலம் பெரிய அளவில் பிரச்சனை வந்துவிடும். மேலதிகாரிகளிடம் பேசும்போது மீட்டிங்கில் பேசும்போது, கரெக்டா நோட்ஸ் எடுத்து வச்சுக்கோங்க. உங்கள் படிப்பில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டுவிட்டது. இருந்தாலும் ஏதாவது புதுசாக கூடுதலாக சம்மர் கிளாஸ்க்கு போறவங்க கவனமா இருங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை அதிகமாக இருக்கும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மனது ஆன்மீகத்தை நாடும். இதனால் மன நிம்மதியும் பெறுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். இறை ஆசிர்வாதம் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய நாள் இது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய யுத்திகளை அறிமுகப்படுத்தலாம் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு என்று தேவையில்லாத பிரச்சினைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். நீங்களே அதிகமாக பேசிப் பிரச்சினையை இழுத்துக் கொள்ளாதீர்கள். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இன்று உங்களுக்கு நன்மை நடக்கும். புதிய எதிரியை உருவாக்குவதன் மூலம் நிச்சயம் நல்லது நடக்கப் போவது கிடையாது. எதிரியையும் நண்பர்களாக மாற்றக்கூடிய வித்தையை கத்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். பிள்ளைகளது மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். சேமிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாள் உடல் ஆசதி விளக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மேலதிகாரிகள் தொல்லை நீங்கும்.