Friday, 18 April 2025

வவுனியா இளைஞன் உயிரிழப்பில் உறவினர்கள் பகீர் தகவல்..!!!

SHARE

வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து பு நேற்று முன் தினம் (16) மாலை இளைஞன் ஒருவரின் சடலம் இரத்தக் கறைக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் புதுவருட தினத்தன்று (14) காலை வீட்டில் இருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றதாகவும் தமது கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீதியால் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, மரணமடைந்த இளைஞன் தன்னை சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போறேன். பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடும் படியும் கோரியுள்ளார்.

இதனையடுத்து இளைஞனை உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் இரண்டு தினங்களின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள உறவினர்கள், கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
SHARE