யாழ். தும்பளையில் பெண் அடித்துக் கொலை : களவுக்குச் சென்ற இளைஞன் கொடூரம்..!!!
யாழ்ப்பாணம் தும்பளையில் தனிமையிலிருந்த பெண் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தும்பளை மாம்பிரம்பற்றை வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த சின்னத்தம்பி குணதேவி (வயது-69) என்ற பெண்ணே அடித் துக் கொலை செய்யப்பட்டவராவார்.
ஓய்வுநிலை ஆசிரியையான சகோதரியுடன் குறித்த பெண் வசித்து வருகின்றார்.
குறித்த ஆசிரியை நேற்றுக் காலை உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைக்காக அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுள்ளார். மற்றைய பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இரு பெண்களும் தேவாலயத்திற்கு சென்றுள்ளார்கள் என நினைத்து, இளைஞன் ஒருவர் வீட்டினுள் களவுக்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை வீட்டில் இருந்த பெண் இளைஞன் களவில் ஈடுபடுவதனை அவதானித்ததையடுத்து இளைஞன் பொல்லினால் குறித்த பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இரத்த வெள்ளத்தில் வீழ்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.
அந்நிலையில், தேவாலயத்திற்குச் சென்ற மற்றைய பெண் வீட்டிற்கு வந்தபோது இரத்த வெள்ளத்தில் சகோதரி சடலமாகக் காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கதுடன் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தடயவியல் பொலிஸார் அயல் வீட்டு இளைஞனைக் கைது செய்துள்ளனர்.