மே மாதத்தில் நடக்கப்போகும் 6 கிரக மாற்றங்கள் இந்த 5 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்..!!!


ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்து கிரகங்களும் தங்களின் இயக்கத்தை மாற்றிக் கொள்கின்றன. மேலும் ஒவ்வொரு மாதமும் பல கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறுகிறது. வரப்போகிற மே மாதத்தில், சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு மற்றும் கேது ஆகிய 6 கிரகங்களின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். மே 14, 2025 அன்று, சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

மே 06, 2025 அன்று, புதன் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார், குருபகவான் மே 14 அன்று மிதுன ராசியிலும், சுக்கிரன் மே 31, 2025 அன்று மேஷ ராசியிலும் சஞ்சரிக்கிறார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் சஞ்சரிப்பார்கள்.

இந்த மாதம், குரு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் சஞ்சரிப்பார். கிரகங்களின் இந்த பெரிய மாற்றங்கள் 5 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப்போகிறது. மே மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகிற 5 ராசிகாரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

மே 2025 கிரக இயக்கங்களால், ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த மாதம், ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பாராத லாபம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதோடு, புதிய சொத்துக்களையும் வாங்கலாம். இந்த மாதம் நீங்கள் ஒரு புதிய வாகனம் வாங்கலாம் அல்லது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு முக்கியமான நபரின் நட்பைப் பெறலாம். மேலும், இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் சில சுப நிகழ்வுகள் நடைபெறலாம். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான காலமாக இருக்கும்.

கடகம்

மே 2025 கிரக இயக்கங்களின் படி, கடக ராசிக்காரர்கள் வருமானம் மற்றும் லாப நிலைகளில் பெரிய முன்னேற்றத்தை அடையப்போகிறார்கள். மேலும், இந்தக் காலகட்டத்தில் அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முதலீடு செய்ய விரும்பினால், இந்த மாதம் பொருத்தமான மாதமாக இருக்கும், ஏனெனில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மே மாதத்தில் கடக ராசிக்காரர்கள் நிதிரீதியாக மிகவும் வலுவான நிலையில் இருப்பார்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.


சிம்மம்

மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே சூரியன் சிம்ம ராசியின் அதிர்ஷ்ட வீட்டில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்களின் தாமதமான பணிகளை இப்போது முடிக்க முடியும். மேலும், இந்த மாதம் அவர்களுக்கு நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து தடைப்பட்ட பணிகளும் சரியான காலக்கெடுவில் தீர்க்கப்படும், மேலும் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். இதனால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். சில முக்கிய வேலைகளுக்காக பணம் செலவிட வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு, மே 2025 இல் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பான மாற்றங்களை அளிக்கப்போகிறது, அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்திற்கே மகிழ்ச்சியைக் கொடுக்கும் சில நல்ல செய்திகள் தேடிவரும். மேலும், இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள் மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். வேலையில் இருப்பவர்களும் இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். இருப்பினும், உங்கள் ராசியில் குருவின் பகைமை காரணமாக, வருமானம் சாதாரணமாகவே இருக்கும். உங்களுக்கு செலவுகள் இருக்கும், ஆனால் அது உங்கள் நிதி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

மகரம்

மே மாத கிரக இயக்கங்களின்படி, மகர ராசிக்காரர்களுக்கு மே மாதம் நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் நான்காவது வீட்டில் உச்சம் பெறுவதால், பல்வேறு துறைகளில் நிதி ஆதாயங்கள் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதம் உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களை பெறுவீர்கள்.

தனியார் வேலைகளில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் போன்ற வாய்ப்புகள் கிடைக்க உள்ளன. குடும்பத்தில் சில நல்ல நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
Previous Post Next Post


Put your ad code here