யாழில். கல்சியம் நீக்கியை அருந்தியவர் உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் யோகேஸ்வரன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்து கல்சியம் நீக்கியை அருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.