Thursday, 27 March 2025

யாழில் பெண் சட்டத்தரணி திடீர் மரணம்..!!!

SHARE


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ,
கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே. குலநாயகத்தின் மகள் செல்வி ஆன் சுமங்கலா குலநாயகம் (வயது 35) திடீர் சுகவீனம் காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே , மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.



SHARE