இந்த 2025 இல் ஒரே ராசியில் பல கிரகங்கங்கள் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கிறது. கிரகப்பெயர்ச்சிகள் ஒரு ராசியின் எதிர்கால பலனை கூறக்கூடியவை என நம்பப்படுகின்றது.
எனவே தான் ஜோதிடத்தில் இதை முக்கியமாக பார்க்கின்றனர். அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்தில், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறது.
மேலும், சந்திரன், ராகு, புதன் மற்றும் சுக்கிரன் மீன ராசியில் ஒன்றாகச் சஞ்சரித்து, சதுர்கிரக யோகம் உருவாகிறது. இதனால் சில ராசிகள் நற்பலனை அனுபவிக்கப்போகின்றது. அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு சதுர்கிரஹி யோகம் 2025 மிகவும் சிறப்பாக இருக்கும்.
- இந்த யோகம் இந்த ராசியின் நான்காவது வீட்டில் உருவாகிறது.
- நீங்கள் எந்த செயலிலும் வெற்றியை குவிப்பீர்கள்.
- நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பாராட்டப்படுவீர்கள்.
- உங்கள் வேலையின் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வெளியிடத்திற்கு செல்ல நேரிடும்.
- வருமானத்திற்கான புதிய வழிகள் திறப்பதால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு சதுர்கிரக யோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது.
- இந்த யோகம் கும்ப ராசிக்காரர்களின் செல்வம் மற்றும் பேச்சு வீட்டில் உருவாகிறது.
- அதிகமான பணத்தை சம்பாதிக்க வாய்ப்புக்கள் ிறைய தேடி வரும்.
- பணத்தை அதிகமாக சேர்த்து நிதியில் முன்னேறி வருவீர்கள்.
- இதனுடன், சமூகத்தில் அவர்களின் செல்வாக்கு மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
- உங்கள் பேச்சு மற்றும் வார்த்தைகள் சமூகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படும்.
மீனம்
- சதுர்கிரக யோகம் மீன ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சியையும், நன்மையையும் அளிக்கப்போகிறது.
- இந்த யோகம் மீன ராசியின் லக்னத்திலேயே உருவாகிறது.
- இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்
- மேலும் இது வாழ்க்கையில் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது.
- இது அவர்களின் சுயமரியாதையை உயர்த்துகிறது மற்றும் பிரச்சனையின்றி வேலைகளை முடிக்க உதவுகிறது.
- இந்த யோகத்தால் அவர்கள் உடல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணத்தை எதிர்பார்க்கலாம்.