Wednesday, 26 February 2025

மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொள்ள வந்த வவுனியாவை சேர்ந்த நபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆறுகால்மட பகுதியில் தமது உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்ள தனது மனைவியுடன் வவுனியாவில் இருந்து வந்திருந்தார் எனவும் , மரண சடங்குக்கு சென்று வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று நீராடிய வேளை மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
SHARE