இன்று (13) மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.