பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் சென்று வழிபட மக்களுக்கு அனுமதி..!!!
பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்கு இன்று (20) முதல் தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினசரி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்கு செல்பவர்கள் ஏற்கனவே சென்று வந்த பாதையூடாக செல்ல முடியும்.