Tuesday 22 October 2024

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சவால் விட்டுள்ள அங்கஜன்..!!!

SHARE

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக 2020- 2024 காலத்தில் 4.5 பில்லியன் ரூபாய்களை அரசிடமிருந்து என்னால் கொண்டுவர முடிந்தது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் . தேர்தல் தொகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக 2020- 2024 காலத்தில் 4.5 பில்லியன் ரூபாய்களை அரசிடமிருந்து என்னால் கொண்டுவர முடிந்தது. அவை எங்கே எப்படி பயன்பட்டது, பயன்பெற்றவர்கள் விபரங்கள் அனைத்தையும் என்னால் மக்களிடம் முன்வைக்கமுடியும்.

என்னை விட 1 ரூபாய் அதிகமாக கடந்த 4 வருடத்தில் யாழ் மாவட்ட மக்களுக்காக ஒரு அரசியல்வாதி கொண்டுவந்திருந்திருக்க மாட்டார்கள் என நான் சவால் விடுகிறேன். அதேபோல ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் கடந்த 4 வருடத்தில் சொன்னதில் செய்ததை மக்களிடம் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
SHARE