Thursday 17 October 2024

ஜேர்மனியில் வசிக்கும் நபரின் யாழில் உள்ள காணியில் மோசடி..!!!

SHARE


ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் காணியை மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தற்போது ஜேர்மன் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு சொந்தமான காணி ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ளது. அந்த காணியை மோசடியாக கை மாற்றியுள்ளனர்.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ் , மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காணி உரிமையாளர் நாட்டில் இல்லாத கால பகுதியிலையே உரிமையாளரின் போலி கையெழுத்தினை வைத்து காணியை மோசடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர். அந்நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் மேலும் இருவரை நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய போது, இருவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
SHARE