Tuesday 22 October 2024

இன்றைய ராசிபலன் - 22.10.2024..!!!

SHARE



மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று நேர்மை தவறாமல் நடந்து கொள்வீர்கள். யாராவது உங்களை பொய் சொல்ல சொன்னால் கூட, சொல்ல மாட்டீர்கள். உண்மையைச் சொல்லி பிரச்சனையே வந்தாலும் சரி, இந்த நாள் உங்களுடைய நேர்மையை சோதித்துப் பார்க்க அந்த கடவுள் ஆளும் முடியாது. நல்லதே நடக்கும். ஆயிரம் கஷ்டம் வந்தாலும் தர்ம பாதையில் செல்லுபவர்களுக்கு கடவுளே துணை. உங்களுக்கும் இன்று கடவுள் துணையாக நிற்பான்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். தோல்வியை வந்தாலும் அதை பார்த்து துவண்டு போக மாட்டீர்கள். எப்படியாவது போராடி வெற்றி வாகை சூடி கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஏளனமாக பேசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழக்கூடிய நாள் இது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக திகழ்வீர்கள். உங்களை பார்ப்பவர்களுக்கும் உங்களைப் போலவே சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று தோன்றும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் இன்று நீங்கள் விளக்கு ஏற்றி வைப்பீர்கள்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அப்படியே நடக்கும். சில பேருக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். சந்தோஷத்தில் மனது ஒரு நிலைப்படாது. குடும்பத் தலைவிகளுக்கு இன்று இனிய நாளாக அமையும். பெரியவர்கள் இடத்தில் பாராட்டும் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அரசு அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அரசாங்க தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நஷ்டம் ஏற்படக்கூடிய நாளாக இருக்கிறது. நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். மற்றபடி வேலையில் கூடுதல் கவனம் இருந்தால் போதும். கைமாத்தாக யாராவது பணம் கேட்டால் கொடுக்காதீங்க. திரும்பி வருவது சந்தேகம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பெரியவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள். புதுசாக முடிவு எடுப்பதாக இருந்தால் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது. குறிப்பாக இளைஞர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மனது ஏதோ ஒரு விஷயத்தை சிந்தித்துக் கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் முழு கவனம் இருக்காது. இதனால் உங்களுடைய வேலையில் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்திலும் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தேவையற்ற சிந்தனையில் இருந்து வெளிவர வேண்டும். இறைவழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். இன்று மாலை சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு இன்று தீபாவளி பர்ச்சேஸ் நடைபெறும். மனைவிக்கு பிடித்த குழந்தைக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் பயணத்திலும் கவனம் இருக்கட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு ரூபாய், பத்து ரூபாயாக மாறும். சந்தோஷமும் இரட்டிப்பாகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். நிதிநிலைமை சீராக்கும் கடன் சுமை குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக சாதிக்க முடியாத விஷயத்தை இன்று சாதித்திருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டி விழ வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் சுற்றி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய முழு நல்லதையும் வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அந்தந்த வேலை, அந்தந்த நேரத்தில் நடக்கும். பெருசாக டென்ஷனும் இருக்காது. அலைச்சலும் இருக்காது. நிதிநிலைமை மட்டும் கொஞ்சம் மோசமாக இருக்கும். வருமானத்தில் பிரச்சனை இருக்கும். செலவை குறைக்க வேண்டும். கடன் வாங்குவதை குறைக்க வேண்டும். சோம்பேறித்தனத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

SHARE