Monday 21 October 2024

நவம்பர் 14இல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடை கோரி உயர் நீதிமன்றில் மனு..!!!

SHARE

நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் முடிவை சவாலுக்கு உள்படுத்தி சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு அமைய வேட்புமனுக்களை கோருவதற்கும் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தவறிவிட்டதாகக் கூறி, 'ஏபி ஸ்ரீலங்கா' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்.எம்.பிரியந்த ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
SHARE