Saturday 21 September 2024

இலங்கையில் ஊரடங்கு - விசேட அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க தூதரகம்..!!!

SHARE

இலங்கையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளிற்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் தனதுஅறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது.

இலங்கை அரசாங்கம் செப்டம்பர் 21 ம் இரவு பத்து மணிமுதல் செப்டம்பர் 22 அதிகாலை ஆறு மணிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு தொடர்பான மேலதிக அறிவிப்புகளிற்காக உள்ளுர் ஊடகங்களையும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களையும் தொடர்ந்து அவதானித்த வண்ணமிருங்கள்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அனைத்து அமெரிக்க பிரஜைகளையும்,மேலதிக தகவல்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளிற்காக ஸ்டெப்பில் Smart Traveler Enrollment Program (STEP) பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
SHARE