Monday 19 August 2024

யாழில். வேலைக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு..!!!

SHARE


வேலைக்கு சென்ற இளைஞன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு , உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியை சேர்ந்த தவராசா ரகுமாதவா (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில் , வேலைத்தளத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை கோப்பாய் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
SHARE