Monday 19 August 2024

யாழ் . கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பகுதியை சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு , நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை , நெஞ்சு வலிப்பதாக கூறி , கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார்.

அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார்.
SHARE