Thursday 4 July 2024

சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்..!!!

SHARE

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தன்னிச்சையாக வருவாய் ஆணையச் சட்டம் கொண்டு வரவும், சுங்கச் சட்டத்தின் பல பிரிவுகளைத் திருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர் இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தாரக குமாரசிங்க தெரிவித்தார்.

இவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காததால் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.


தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக தாரக குமாரசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
SHARE