Thursday 27 June 2024

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு..!!!

SHARE
பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இணுவில் கிழக்கில் நேற்று(26) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் பிரவீன் அக்ஷரா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் குழந்தையினை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குழந்தையினை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


மரணம் தொடர்பிலான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
SHARE