Sunday 12 May 2024

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கைது..!!!

SHARE

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழில் பண மோசடியில் ஈடுபட்ட தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட அமைப்பாளர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுளளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார்.


இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட பெருநிதி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தென்னிலங்கை பிரதான கட்சி ஒன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் எனவும் , நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் , வேறு நபர்களிடமும் பண மோசடிகளில் ஈடுபட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE