Sunday, 4 February 2024

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த மாணவன்..!!!

SHARE

மன்னாரில் கடற்படையின் வாகனத்துடன் மோதி காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவன் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மன்னார், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த 19 வயதான முஹமட் முத்திஹம் சாத் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 31ஆம் திகதி சிலாவத்துறையில், மோட்டார் சைக்கிளில் மாணவன் பயணித்தபோது எதிரே வந்த கடற்படை வாகனம் திடீரென வலப்பக்கம் திரும்பியதால் விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மரணம், விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE