O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலி..!!!
களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
15 மற்றும் 16 வயதுகளுடைய இரு மாணவிகளும், 17 வயதுடைய மாணவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ள இரு மாணவிகளும் இம்முறை க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர்கள்.
இவர்களில் ஒருவரின் காதலனே உயிரிழந்த மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் முதலில் களுத்துறை கடலிலேயே நீராடியுள்ளனர். மாணவியொருவரின் கோரிக்கையின் பிரகாரம் களுகங்களை கங்கை களப்பு பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர்.
மாணவிகள் முதலில் நீரில் மூழ்கியுள்ளனர் எனவும், அவர்களை காப்பாற்ற முற்படுகையிலேயே மாணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.