Monday 8 January 2024

தோண்டி எடுக்கப்பட்ட இளம் பெண்ணின் உடல்..!!!

SHARE

சில நாட்களுக்கு முன்னர் பண்டாரவளை பதுலுகஸ்தென்னவில் நிமோனியா நோயினால் உயிரிழந்த 25 வயதுடைய ரஷ்மிகா நதிஷானி என்ற சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு நிர்வாணமாக காணப்பட்ட சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த சிறுமியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை ஒரு தனிநபரால் அல்லது ஒரு குழுவால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் கல்லறைக்குச் சென்று பார்த்த போது சடலத்தை தோண்டி எடுத்து நிர்வாணமாக்கியிருப்பதைக் கண்டு பொலிஸில் முறையிட்டார்.

ஒரு தனி நபரோ அல்லது குழுவோ இறந்தவரின் சடலத்தை தோண்டி எடுத்து அசுத்தப்படுத்தியிருக்கலாம் என பண்டாரவளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பண்டாரவளை பதில் நீதவான் மற்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE