Monday 15 January 2024

யாழ்ப்பாணம், கொழும்பு, மன்னாரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு..!!!

SHARE


|இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் காற்றில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப்பேச்சாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டையை அண்மித்த பகுதிகளில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 105 புள்ளிகளாகவும், யாழ்ப்பாணத்தில் 100 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளது.
SHARE