காங்கேசன்துறையில் மீள் குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்..!!!
கேமா அறக்கட்டளையினால் காங்கேசன்துறை மேற்கில் வசிக்கும் 10 குடும்பங்களுக்கு, தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடும் முகமாக பொங்கல் பானை, அகப்பை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
காங்கேசன்துறை மேற்கு கிராம சேவகர் பிரிவில் மீள குடியேறியுள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாங்கொல்லை கிராம சேவகர் அலுவலகத்தில் இன்றைய தினம் கிராமசேவகர் மற்றும் கேமா அறக்கட்டளையின் நிர்வாகியினாலும் குறித்த பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.