Friday 5 January 2024

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழப்பு..!!!

SHARE

யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் , திடீர் சுகவீனமுற்ற நிலையில் கரைக்கு அழைத்து வரப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரனி ஜூட் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடற்தொழிலுக்காக மேலும் மூவருடன் கடலுக்கு சென்ற நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். அதனை அடுத்து ஏனையவர்கள் படகினை திருப்பி கரைக்கு கொண்டு வந்து அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
SHARE