Thursday 11 January 2024

யாழில், பழிவாங்கவே பெற்றோல் குண்டு வீசினோம்; விசாரணையில் வெளிவந்த தகவல்..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை பொலிஸாரின் காவலரண் மீது நேற்றைய தினம் புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற இருவரை பொலிஸார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , அண்மையில் மண்டைதீவு காவலரணில் வைத்து நபர் ஒருவரை பொலிஸார் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர். அந்த சம்பவத்திற்கு பழிவாங்கவே காவலரண் மீது தாக்குதல் நடாத்தியதாக சந்தேகநபர் தெரிவித்ததாகவும், தொடர்ந்தும் இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE