வவுனியாவில் இளைஞன் உயிரிழப்பு..!!!
வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் இன்று மரணமடைந்தார். சம்பவத்தில் செட்டிகுளம் முகத்தான் குளத்தை சேர்ந்த பிரசங்கர் வயது 22 என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தார்