மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!!!
மாத்தளை - ரத்தோட்டை , கம்மடுவ பிரதேசத்தில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாத்தளை - கம்மடுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயது மாணவனாவார்.
இவர் பாடசாலையில் உள்ள இளநீர் மரத்தில் இளநீர் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இந்நிலையில் இளநீரை இலகுவாக பறிப்பதற்காக மற்றொரு மாணவன் மூங்கில் மரக்கிளை ஒன்றை குறித்த மாணவனிடம் கொடுத்துள்ளார்.
குறித்த மூங்கில் மரக்கிளை அருகில் இருந்த மின் கம்பத்தில் பட்டதில் மரத்தில் இருந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கம்மடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.