யாழ்ப்பாணத்தில் பிரிட்டன் இளவரசி..!!!
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
பிரித்தானிய இளவரசி ஆன் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்றையதினம் நாட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட உலங்கு வானூர்தி மூலம் அவர்கள் யாழிற்கு வருகை தந்தனர்.
இளவரசி உள்ளிட்ட குழுவினர் , யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தில் தரையிறங்கிய போது, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உள்ளிட்டவர்கள் இளவரசி குழுவினரை வரவேற்றனர்.
இதன்போது பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.