Sunday 14 January 2024

கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு..!!!

SHARE


கடலில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தொட்டை தர்மபால மாவத்தையைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் கடலில் மூழ்குவதைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக அவரை மீட்டு ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதும் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
SHARE