Friday 12 January 2024

யாழ். சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு..!!!

SHARE

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் வெள்ளிக்கிழமை (12) சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் விஜயம் செய்து பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் என்ற 61 வயதானவரே இவ்வாறு நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE