Thursday 18 January 2024

சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் புரளப் போகுது..

SHARE

வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். மேலும் நவகிரகங்களில் சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.

இந்த சுக்கிரன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 18 ஆம் தேதி சுக்கிரன் குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத அளவில் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் உங்களின் நிலை உயரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். அனைத்துவிதமான பொருள் மகிழ்ச்சியும் கிடைக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். முக்கியமாக திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
 
மேஷம்

மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். இக்காலகட்டத்தில் முதலீடுகளை செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாகக்கூடும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணத்தால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

துலாம்

துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்துவிதமான பொருள் இன்பங்களையும் பெறுவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் இப்பெயர்ச்சிக்கு பின் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வைப் பெறுவார்கள்.
SHARE