Wednesday 13 December 2023

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்..!!!

SHARE

பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாச புத்தகங்களை வழங்கவுள்ளதாக அரச ஊடக பணிப்பாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (13.12.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க அச்சக திணைக்களத்தினாலேயே மேற்குறிப்பிட்டவாறு மானிய முறையில் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் தொடர்பான விபரங்களை வழங்கி புத்தகங்களை விநியோகிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
SHARE