Thursday 28 December 2023

யாழில். ஆலயத்தில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு..!!!

SHARE


ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த சி.இராசரத்தினம் (88) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி வரும் நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமையும் வழமை போன்று ஆலயத்திற்கு சென்று தேவாரம் ஓதிக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார்,

அதனை அடுத்து அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
SHARE