Monday 13 November 2023

யாழ். நகர் வீதியில் தேங்கியுள்ள வெள்ளம்..!!!

SHARE

யாழ் நகரில் கஸ்தூரியார் வீதியும் ஸ்ரான்லி வீதியும் பகுதியில் வழிந்தோட முடியாது வெள்ளம் தேங்கி நிற்பதாக அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

யாழ் மாநகர சபைக்கு அறிவித்தும் இதுவரை காத்திரமான எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மழை பொழிந்து யாழில் சில இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கைக்கு யாழ் மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




SHARE