Monday 6 November 2023

வடக்கில் முதலிடச் சீனர்கள் ஆர்வம் : மக்களும் அதனையே விரும்புகிறார்கள் – யாழில் சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவிப்பு..!!!

SHARE

சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்று இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் உத்தயோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தனர். இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் “சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்ற போது இலங்கைக் கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவே ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்துக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த சீனாவே முதலாவதாகக் கை கொடுத்தது: எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.” என்றார்.

மேலும், “15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளைச் சீனா வழங்கவுள்ளது. 5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும் 5 மில்லியன் வீட்டுத் திட்டத்துக்கும் வழங்கவுள்ளது. சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. அங்கு மிகப் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்காவே வரவேற்கிறோம். சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
SHARE