Saturday 11 November 2023

நல்லூரில் வீதித்தடை..!!!

SHARE


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ்.மாநகர சபை அறிவித்துள்ளது,

அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணி வரையும் 18 ஆம் திகதி சூரன்போர் அன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படும் .

மக்கள் மாற்றுப் பாதைகளை வழமைபோல் கடைப்பிடிக்குமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார் .
SHARE