Thursday 2 November 2023

நெடுந்தீவில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ; போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ஐஸ் போதை பொருளை அளவுக்கு அதிகமாக நுகர்ந்தமையால் உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு மரணம் சம்பவித்து உள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மேற்கை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்.

இளைஞனின் வீடு அருகில் உள்ளதால் , தனது வீட்டிற்கு உணவுக்காக சென்று வரும் நிலையில் , திங்கட்கிழமை உணவருந்த இளைஞன் வராததால் , வீட்டார் இளைஞனை தேடி சென்ற போது , பூட்டிய வீட்டினுள் படுக்கையில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , உட்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டநிலையில் , ஐஸ் போதை பொருளை அளவுக்கு அதிகமாக நுகர்ந்தமையால் உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு மரணம் சம்பவித்து என பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

SHARE