Tuesday 14 November 2023

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் புனர்வாழ்வுக்கு..!!!

SHARE

யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, இளைஞன் போதைக்கு அடிமையானவர் என கண்டறியப்பட்டார்.

அதனை அடுத்து மருத்தவ அறிக்கையுடன் இளைஞனை நேற்றைய தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தியதை அடுத்து, இளைஞனை புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப நீதவான் உத்தரவிட்டார்.
SHARE