Monday 20 November 2023

யாழில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு..!!!

SHARE


யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. 

மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE