சாட்டி மாவீர்ர துயிலுமில்லத்தில் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு..!!!
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் சாட்டி மாவீர்ர துயிலுமில்லத்தில் துப்பரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
தாயக விடுதலைக்காக தனது மூன்று பிள்ளைகளை வித்தாக்கிய சண்முகலிங்கம் பொது சுடரேற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பிக்கபட்டு துப்பரவு பணிகள் தொடர்ந்தது.
வழமை போல் இவ்வருடமும் மாவீரர் தின நிகழ்வுகள் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.