அரசாங்க பாடசாலைகளில் பரீட்சைகள் இடம்பெறும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை அவசர காலங்களில் நடத்தும் போது இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.