Saturday, 10 July 2021

இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!

SHARE

இன்று(10) அதிகாலை 6 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் கேகாலை மாவட்டத்தின் மலவிட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கோலிந்த தோட்டத்தின் 03 ஆம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் மாத்தறை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
SHARE