Friday, 9 July 2021

யாழில் இன்று ஆசிரியர்கள் உள்பட பாடசாலை உத்தியோகத்தர்கள் 5,957 பேருக்கு தடுப்பூசி கிடைத்தது..!!!

SHARE


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை 5 ஆயிரத்து 957 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 50 ஆயிரம் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளில் இன்று 5ஆவது நாளில் 7 ஆயிரத்து 266 பேர் தமக்கான முதலாவது டோஸைப் பெற்றுக் கொண்டனர். கடந்த 5 நாள்களில் 45 ஆயிரத்து 722 பேர் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10 ஆயிரத்து 354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவர்களில் 5 ஆயிரத்து 957 இன்று கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டது. இது மொத்த உத்தியோகத்தர்களில் 57.53 சதவீதம் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.



 

SHARE