Saturday, 12 June 2021

தடுப்பூசி பெற்ற பலருக்கு மீண்டும் கொரோனா..!!!

SHARE


சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதன் பின்னரும், நோய் அறிகுறிகள் காணப்பட்ட  சிலர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள் காணப்பட்ட, 22 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது காணப்படும் எந்தவொருகொரோனா தடுப்பூசியும் வாழ்நாள் முழுவதும் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் என உத்தரவாதமளிக்கமுடியாது என, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்திருந்தார்.

மேலும், இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை நோயெதிர்ப்பு சக்தி காணப்படும் என கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், குறித்த நோயெதிர்ப்புசக்தி ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்குமா இல்லையா என்பது குறித்து விஞ்ஞான ரீதியான பதிலொன்றுஇதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே, கொரோனா தடுப்பூசியை வருடத்துக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்து உறுதி கூற முடியாது எனவும், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE