Saturday 4 May 2024

யாழில் மாதா சிலையில் வடியும் கண்ணீர் : பார்வையிட குவியும் மக்கள்..!!!

யாழில் மாதா சிலையில் வடியும் கண்ணீர் : பார்வையிட குவியும் மக்கள்..!!!


யாழ்ப்பாணம்  இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவமானது, நேற்று (04.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.

யாழில். வெளிநாட்டு சொக்லேட் விற்பனையில் ஈடுபட்டவருக்கு 1 இலட்ச ரூபாய் தண்டம்..!!!

யாழில். வெளிநாட்டு சொக்லேட் விற்பனையில் ஈடுபட்டவருக்கு 1 இலட்ச ரூபாய் தண்டம்..!!!


சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு. பாலேந்திரகுமார் மற்றும் கி,அஜந்தன் ஆகியோர் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு இல்லாத வெளிநாட்டு சொக்லேட் வகைகள் , மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பவற்றை மீட்டு இருந்தனர்.

அதனை அடுத்து உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , வழக்கு விசாரணைகளில் உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிட்டது.
இன்றைய ராசிபலன் - 04.05.2024..!!!

இன்றைய ராசிபலன் - 04.05.2024..!!!

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து நடக்காத நல்ல காரியங்களை இன்று கையில் எடுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாம் சுலபமாக முடியும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிக்கள் பிடுங்கள் இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் சமாளித்து வெளிவர வேண்டியது உங்களுடைய திறமை. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கோபங்கள் கொஞ்சம் அதிகமாக வரும். இதனால் சின்ன சின்ன இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறைய தொடங்கும். லாபம் படிப்படியாக உயரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் மேல் படிப்புக்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் பிரச்சனையில் இருந்து வெளிவருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் உயரும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு ஆரோக்கியமான பொருட்களை மட்டும் சாப்பிடவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் சுபமாக முடியும். புதுசா வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது‌ புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கும் இன்று முன்னேற்றம் தரும் நாளாக அமையும். மொத்தத்தில் இன்று உங்களுக்கு பிரச்சனைகள் இல்லை.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். எல்லா காரியத்திலும் புத்திசாலித்தனமாக நின்று நிதானமாக சிந்தித்து செயல்படுவீர்கள். எதிரிகளுடன் போட்டி போட்டு ஜெயிப்பதில் நம்பர் ஒன் நீங்கதான். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கிக் கடன் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லா இடத்திலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தொழிலில் தன்னிச்சையாக செயல்பட்டு, தனித்து தன்னிச்சையாக சிந்தித்து சாதித்து காட்டுவீர்கள். அடுத்தவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு இன்று உங்களுடைய முன்னேற்றம் காணப்படும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்பம் இரட்டிப்பாக கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு நிறைவே வாய்ப்பு உள்ளுள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த உயர் பதவிகள் தானாக உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சை மட்டும் கேளுங்கள். அனாவசியமாக பேசுபவர்களை விட்டு தள்ளி நில்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று நேரத்தை நகர்த்தி சொல்வீர்கள். குடும்பத்தோடு இன்று மாலை வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. சுப செலவு ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய அனுபவங்களை கற்றுத் தரும். நிறைய பாடங்களை கற்றுத் தரும். புதிய மனிதர்களின் சந்திப்பு இருக்கும். இதுதான் உலகம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்திருப்பீர்கள். அதையெல்லாம் புரிய வைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம். பிரச்சனை வந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராக இருங்கள். சந்தோஷம் வந்தாலும் அதை அடக்கத்தோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. விடுமுறை நாட்களில் இருக்கக்கூடிய மாணவர்கள் உங்களுடைய உயர் கல்வியை பற்றி கலந்தாலோசிக்கலாம். இன்று எடுக்கும் முடிவு உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டும் செய்யலாம். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தாலும் சில பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளால் சிக்கல் வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவு இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அதிகமான வெயிலில் வெளியே போகாதீங்க.

Friday 3 May 2024

புத்தளத்தில் இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது..!!!

புத்தளத்தில் இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது..!!!


புத்தளம் - கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டக்குடா பகுதியில் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.


சம்பவம் தொடர்பில் தாழையடி பகுதியை சேர்ந்த சிசுவின் 32 வயது தாய் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகவீனமுற்றிருந்த குழந்தையையும் தன்னையும் கணவர் கவனிக்காத நிலையில், சிசுவின் தாய் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்..!!!

கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்..!!!


கிராம உத்தியோகத்தர்கள் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார்.
இரு பஸ்கள் மோதி விபத்து ; 23 பேர் வைத்தியசாலையில்..!!!

இரு பஸ்கள் மோதி விபத்து ; 23 பேர் வைத்தியசாலையில்..!!!


இரண்டு பேருந்துகள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் அம்பாறை - கல்ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.

இதன் போது குறித்த விபத்தில் மாணவர்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்களும் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.