Friday, 28 March 2025

யாழில். மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது..!!!

யாழில். மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது..!!!



பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தரம் - 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, அடிவாங்கியதாக கூறப்படும் மாணவி , தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு , பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறியுள்ளார். அந்த மாணவியும் அதனை செய்துள்ளார்.

இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து , கடுமையாக எச்சரித்து , மாணவிகளை தடியால் அடித்து , தண்டனை வழங்கியுள்ளார்.

அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது , மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு , ஆசிரியருக்கு ஆதரவாக பாடசலையின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியிருந்த நிலையில் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம். நீதிமன்றில் வந்து பார்க்குமாறு அறிவுறுத்திய பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இன்றைய ராசிபலன் - 28.03.2025..!!!

இன்றைய ராசிபலன் - 28.03.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் நிறைய முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் ஆனவர்கள், தாய் தந்தையராக பிரமோஷன் பெறவும் வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி கூடுதல் நன்மைகளை கொடுத்த இந்த நாளுக்கு இறைவனிடம் நன்றியை சொல்லுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த மார்க்கத்தில் செய்து முடித்து, நல்ல பெயரும் வாங்குவீர்கள். திறமை வெளிப்படக்கூடிய நாள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். வீட்டில் முதியவர்களுடைய ஆரோக்கியமும் மேம்படும் மன நிம்மதி கிடைக்கும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் உள்ளது. கோர்ட் கேஸ் வழக்குகளை இன்ற கையில் எடுங்கள். தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

கடகம்


கடக ராசி காரர்கள் இன்று மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். மனநிம்மதியை அடைவீர்கள். தேவையற்ற டென்ஷன் உங்களிடம் குறையும். ஆன்மீக ரீதியான வழிபாடு உங்களுக்கு மனநிறைவை கொடுக்கும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு கரையும்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் டென்ஷன் அதிகமாக இருக்கும். வியாபாரத்திலும் சில பல தொல்லைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிறைய அனுபவங்கள் கிடைக்கும். புதிய மனிதர்களின் நட்பு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரும். வியாபாரத்திலும் பாட்னரோடு வாடிக்கையாளரோடு சில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஜாக்கிரதை, முன்கோபம் வேண்டாம் பொறுமையாக பிரச்சனைகளை கையாளுவோம்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும். விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலையில் டென்ஷன் குறையும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பதட்டமும், மன பயமும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும், சந்தேகத்தோடு தான் செய்வீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாததால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அனுமனை வழிபட்டால் மன தைரியம் பிறக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரக்கூடாது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் நிதானதோடு இருக்க வேண்டும். முன்கோபம் வந்தால் நஷ்டம் அதிகமாகிவிடும். பொறுமையாக இருங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். பெரியவர்களுடைய பேச்சு, அனுபவசாலிகளுடைய பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. எந்த விஷயத்திலும் அகல கால் வைக்க வேண்டாம். முக்கியமாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டீர்கள். மன நிம்மதி கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். டென்ஷன் குறையும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். வாழ்க்கையில் எந்த அளவுக்கு நீங்கள் அடிபட்டீர்களோ, அந்த அளவுக்கு நன்மைகளை பெறக்கூடிய நாளாக இருக்கும். உழைப்பு என்றுமே வீண் போகாது என்பதை புரிந்து கொள்வீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். முன்னேற்றத்திற்கு தேவையான பிள்ளையார் சுழியை இன்று போடலாம் நல்லது.

Thursday, 27 March 2025

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கைது..!!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா சென்ற இருவர் கைது..!!!



கனடாவின் பிக்கரிங் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கனடாவின் மார்க்கமில் வசிக்கும் 24 வயதான கோகிலன் பாலமுரளி மற்றும் டொராண்டோவில் வசிக்கும் 24 வயதான பிரானன் பாலசேகர்ஆகியோர் கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டனர்.

முதலாவதாக, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட இருவரிடன் ஏன் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை பொலிஸார் அப்போது அறிவித்திருக்கவில்லை.

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, கொலை செய்ய சதி செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும், திருட்டு என இரண்டு குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் அவர்கள் மீது சுமத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வேலைக்காக கனடா சென்று அங்கு குடியேறியவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு கொலைகளில் ஒன்று, உணவகத்தில் பணிபுரியும் போது ஏற்பட்ட சம்பள தகராறில் நடந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குற்றத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள சி.சி.டி.வி கேமரா அமைப்புகளை ஆய்வு செய்து, சந்தேக நபர்களின் முகங்களை வரைந்து, மாகாணத்தின் ஒவ்வொரு இடத்திலும் அவற்றைக் காட்டிய பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 11ஆம் திகதி மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய டொலர் பெறுமதி..!!!

இன்றைய டொலர் பெறுமதி..!!!



அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 300 ரூபாய் 62 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபாய் 56 சதம் விற்பனை பெறுமதி 389 ரூபாய் 65 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபாய் 92 சதம், விற்பனை பெறுமதி 325 ரூபாய் 67 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 45 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 33சதம், விற்பனைப் பெறுமதி 211 ரூபாய் 94 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 60 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 47 ரூபாய், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 21 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 9 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 01சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு..!!!

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு..!!!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக் கூடிய தொகை அறிவிப்பு..!!!

வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக் கூடிய தொகை அறிவிப்பு..!!!


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு ரூ.74 முதல் ரூ.160 வரை செலவிடலாம் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.