Wednesday, 2 April 2025

யாழில். குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!

யாழில். குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் உரும்பிராயில் தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த 45 வயதுடைய ஐயாத்துரை புலேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மகளும்,மனைவியும் வேலைக்குச் செல்ல முற்பட்டவேளை குறித்த குடும்பஸ்தர் தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இந்நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.
இன்றைய ராசிபலன் - 02.04.2025..!!!

இன்றைய ராசிபலன் - 02.04.2025..!!!



மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். மனதை அலைபாய விட வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி செயல்படுங்கள். பிரச்சனைகள் வரும்போது அவசரப்படக்கூடாது. நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி பிறக்கும் நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு நீங்கும். கடன் சுமை விலகும். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும் நாளாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு பற்றிய பேச்சுகளை பேசலாம். வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். பிரச்சினைகள் எதுவும் பெருசாக இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமை சீராகும். அடுத்தவர்களை முழுமையாக நம்பி ஏமாறாதீர்கள். பணம் விஷயத்தில் கவனம் தேவை.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். மேலதிகாரிகளுடைய பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதல் கவனத்தோடு இருக்கவும். முதலீட்டில் கவனம் இருக்கட்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபங்கள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கணக்கு துவங்குவது, சீட்டு போடுவது, இதுபோல சேமிப்பை இரட்டிப்பாக்கும் முயற்சிகளில் ஈடுபடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் தொட்ட காரியம் இன்று இரட்டிப்பு லாபம் தரும்.



துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பு கரையக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் வரலாம். சரியான நேரத்திற்கு சொன்ன வேலையை செய்து தர முடியாத சூழ்நிலை உண்டாகலாம். தலைகுனிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலையில் தலை குனிந்த இடத்தில், தலை நிமிர்ந்து நிற்பீர்கள். முயற்சிகளில் முதல் முறையிலேயே வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை நஷ்டங்களை எல்லாம் லாபமாக மாற்றுவீர்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று நிம்மதியை தேடி ஓடுவீர்கள். பிரச்சனைகளிலிருந்து விலகி நிற்பீர்கள். சாப்பாடு கூங வேண்டாம். மன அமைதி இருந்தால் போதும் என்ற சூழ்நிலை வந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கடமைகளை சரிவர கவனிக்க வேண்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத நட்புகள் உறவுகளிடம் இருந்து விலகி இருப்பீர்கள். வாழ்க்கையில் நிறைய அனுபவ பாடங்கள் கிடைக்கும். நிதிநிலைமை மேம்படும். கடன் சுமை குறையும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதானமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளிலும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களை சூழ்ச்சி செய்து வீழ்த்த வேண்டும் என்று நினைத்தவர்கள் முன்னால் நன்றாக வாழ்ந்து காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று தவறுகளை உணர்ந்து விடுவீர்கள். மனம் வருந்தி மன்னிப்பும் கேட்பீர்கள். ஆனால் பிரயோஜனம் இருக்காது. செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோபத்தை குறைத்தால் மட்டுமே உங்களுக்கான நல்லது நடக்கும். தினமும் 10 நிமிடம் இறைவழிபாடு செய்வது நல்லது.

Tuesday, 1 April 2025

Jaffna university staff on overseas scholarship have not returned: Auditor General’s report..!!!

Jaffna university staff on overseas scholarship have not returned: Auditor General’s report..!!!


More than 100 academic and non-academic staff at the University of Jaffna who had gone overseas on scholarship programmes have not reported for duty after the completion of their programmes.

The university had not taken action to recover bonds valued at more than Rs 166 million from these staff members, the Auditor General has noted. According to the Auditor General’s report in the Jaffna University’s 2023 Annual Report, recently tabled in Parliament, 80 academic staff and 21 non-academic staff members who had gone overseas on scholarship programmes had not reported back to the university after completing these programmes. The Auditor General has also noted that the university had not taken proper action to recover bonds amounting to Rs 166,298,684 from these officers during the period from 1980 to 2023.

Meanwhile, recovered bonds amounting to more than Rs 61.7 million had not been sent to the Treasury, the Auditor General has found.

The report notes that even though examination results should be released within 3 months after conducting the examination as per a circular issued by the University Grants Commission, it had taken a period ranging from 4 months to 27 months in 11 faculties of the university from 2019 to 2023. (TheSundayTimes)
ஏப்ரல் 15 முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை..!!!

ஏப்ரல் 15 முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை..!!!


இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் அதாவது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மக்களை கொண்ட மொத்த மக்கள் தொகையில் சுமார் 46 சதவீதத்திற்கு TIN எண்கள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Nominations rejected : 24 hour stay order..!!!

Nominations rejected : 24 hour stay order..!!!


The Court of Appeal has issued an order suspending all election activities related to Local Government Bodies against which petitions have been filed over the rejection of nominations.

Accordingly, the Court of Appeal has suspended election activities for the said Local Government Bodies until tomorrow, 02 April 2025.

It is reported that the court order has been issued after taking up for consideration multiple petitions that have been filed by candidates and independent groups on the rejection of nominations.

In December last year, the Cabinet of Ministers granted approval to amend the Local Government Act to allow fresh nominations to be called for the Local Government Election.

Accordingly, Cabinet approval was granted to cancel the nominations for the Local Government Election that was scheduled to be held in 2023.

The proposal to call fresh nominations was made due to some who had previously submitted nominations having passed away, and some either leaving the country or changing parties.

However, the decision was challenged in court. (Newswire)